இந்தியா
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம்..!...
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற இர?...
பாரதிய ஜனதா கட்சியில் உள்ளவர்களை யாரும் வெறுக்க வேண்டாம் என்றும் அவர்களும் நம் சகோதர சகோதரிகளே என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் எழுதிய கடிதத்தை காண்பித்து அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். புதிய மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், இந்தியாவிற்கு வெளியே மற்றும் உள்ளே சில சக்திகள் நாட்டை பலவீனப்படுத்துவதாகவும் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்ததாக கூறினார். நிச்சயம் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவார் என்றும் மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்படும் என்றும் சுனிதா கெஜ்ரிவால் உறுதிபட தெரிவித்தார்.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற இர?...
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற இர?...