பார்படாஸில் சிக்கியுள்ள இந்திய அணி வீரர்களை தாயகம் அழைத்து வர ஏற்பாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வெஸ்ட் இண்டீசின் பார்படாஸில் சிக்கியுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை தனிவிமானம் மூலம் தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பரிக்கை அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், பார்படாஸில் கடும் சூறாவளி மற்றும் கனமழையால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளது. விமான சேவை அனைத்துமு் நிறுத்தப்பட்டுள்ளதால் கடந்த 2 நாட்களாக பார்படாஸில் இந்திய அணி வீரர்கள் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில், நாளை இந்திய நேரப்படி அதிகாலை  3.30 மணிக்கு தனிவிமானம் மூலம் புறப்படும் இந்திய அணி வீரர்கள், காலை 7.30 மணிக்கு டெல்லி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

varient
Night
Day