பித்தாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டி - பவன் கல்யாண் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் பித்தாபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார். ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டு சேர்ந்து போட்டியிடுகின்றன. மூன்று கட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்ட நிலையில் பித்தாபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தான் போட்டியிட உள்ளதாக பவன் கல்யாண் அறிவித்துள்ளார். முன்னதாக தெலுங்கு தேசம் கட்சி 144 தொகுதிகளிலும், பா.ஜ.க. 10 தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும் போட்டியிடுவது என தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Night
Day