பிரதமருக்கு, மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீதித்துறைக்கு அழுத்தம் மற்றும் அவமதிக்கும் செயலில் காங்கிரஸ் ஈடுபடுவதாக பிரதமர் மோடி கூறியதற்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தங்கள் ஆட்சியில் 4 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னோடியில்லாத வகையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, "ஜனநாயகத்தின் அழிவுக்கு" எதிராக எச்சரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது எதனால் என்றும் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முன் எப்போதும் இல்லாத வகையில் மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்டது எப்படி என்றும், தற்போதைய மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியை ஏன் நிறுத்தியுள்ளீர்கள் என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Night
Day