பிரதமர் பதவியேற்பு விழா நாளை நடக்கவுள்ள நிலையில் உச்சக்கட்ட பாதுகாப்பில் டெல்லி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக நாளை பதவியேற்கவுள்ள நிலையில் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று 3வது முறையாக குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை  நடைபெறும் விழாவில், மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இதையொட்டி டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 5 கம்பெனி நாடாளுமன்ற பாதுகாப்புப் படையினர், என்எஸ்ஜி கமாண்டோக்கள், ட்ரோன்கள், ஸ்னைப்பர்கள் என பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள், உலக தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் தங்கியிருக்கும் நட்சத்திர விடுதிகளில் இருந்து விழா நடைபெறும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வர பிரத்யேக வழித்தடம் அமைக்கப்படுகிறது. அந்தப் பாதை முழுவதும் ஸ்நைப்பர்களும், துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகரின் முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. லீலா, தாஜ், ஐடிசி மவுரியா, க்ளாரிட்ஜெஸ், ஓபராய் ஆகிய நட்சத்திர விடுதிகள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் மாளிகையில் டெல்லி காவல்துறையின் சிறப்பு ஆயுதங்கள், உத்திகள் படைப் பிரிவான ஸ்வாட் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காவலர்கள், 5 கம்பெனி நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு, டெல்லி ஆயுதப்படைக் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு பாதுகாப்பு பணியில் உள்னர். இதுமட்டுமின்றி பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை ஒட்டி டெல்லியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்றவாறு பொதுமக்கள் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளில் இருந்தும் மத்திய டெல்லி செல்லும் பாதைகள் பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி எல்லையை ஒட்டிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

Night
Day