பிரதமர் மோடிக்கு இத்தாலி, நேபாள், மாலத்தீவு பிரதமர்கள் வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தலில் பாஜக 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், உலக தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பாஜக மற்றும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இருநாட்டு மக்களின் நலனுக்காக நாம் இணைந்து பணியாற்றுவோம் என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.

அதேபோல, பிரதமர் மோடிக்கு நேபாள பிரதமரும், மொரிஷியஸ் பிரதமரும், இலங்கை அதிபர் மற்றும் மாலத்தீவு பிரதமரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Night
Day