பிரதமர் மோடிக்கு தன் மீது இன்னும் கோபம் தீரவில்லை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடிக்கு தன் மீது இன்னும் கோபம் தீரவில்லை என போபால் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் கருத்து தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதி எம்பி பிரக்யா சிங் தாக்கூர், காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவை தேச பக்தன் எனக் கூறி சர்ச்சையில் சிக்கினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார். அதேநேரத்தில் பிரக்யா சிங் தாக்கூரை தனிப்பட்ட முறையில் மன்னிக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் வரும் மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பிரக்யா சிங் தாக்கூர் பெயர் இடம்பெறவில்லை. இதனால் மனவேதனை அடைந்த அவர், பிரதமர் மோடிக்கு இன்னும் தன் மீதான கோபம் தீரவில்லை என கூறியுள்ளார். மேலும், போபாலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அலோக் ஷர்மாவுக்குதம் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Night
Day