பிரதமர் மோடியின் 'மன் கி பாத்' நிகழ்ச்சிக்கு இந்தத் தேர்தலுடன் முற்றுப்புள்ளி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கு இந்தத் தேர்தலுடன் முடிவுரை எழுதப்படும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மன் கி பாத் நிகழ்ச்சியை மக்கள் கேட்க விரும்பவில்லை எற்ர். அவர்கள் அரசியலமைப்பின் குரலைக் கேட்கவே விரும்புவதாகவும் குறிப்பிட்டார். ஆனால் அம்பேத்கரின் அரசியலமைப்பை மாற்ற பாஜக முயற்சிப்பதால் இம்முறை பாஜகவை மக்கள் தோற்கடிப்பார்கள் எனக் கூறினார். அதனால் இந்த தேர்தலுடன் பிரதமர் மோடியின் மன் கி பாத் முடிவுக்கு வரும் என்றும் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

Night
Day