பிரதமர் மோடியுடன் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் சந்திப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பஞ்சாப் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள், விவசாயிகள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் விரிவான ஆலோசனை நடத்தியதாக கூறிய அமரீந்தர் சிங், அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் இந்தப் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். கேப்டன் அமரீந்தருடன் அவரது மகளும் பஞ்சாப் பாஜக மகளிர் அணி தலைவருமான ஜெய் இந்தர் கவுர் உடன் இருந்தார். பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கியதை அடுத்து, அவ்வப்போது பாஜகவுடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட இணக்கமான போக்கை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Night
Day