பிரதமர் மோடி, அமித்ஷாவும் எதிர்க்‍கட்சிகளை துன்புறுத்துகின்றனர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அரசு வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்‍கு எதிராக அமலாக்‍கத்துறை, சிபிஐ ஆகியவற்றை பயன்படுத்துவோம் என்று காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியும், அமித்ஷாவும், பழிவாங்குதல், எதிர்க்‍கட்சிகளை துன்புறுத்தும் அரசியலை கடைபிடிப்பதாக தெரிவித்தார். பிரதமர் மோடியின் சகோதரர்களாக அமலாக்‍கத்துறையும், சிபிஐ அமைப்பும் செயல்படுகின்றன என்றார் அவர். இது அரசியல் சாசனப்படி ஜனநாயக அரசியலுக்‍கு எதிரான செயல் என்று குறிப்பிட்டார். தாங்கள் இதனை அஞ்சாமல் எதிர்த்து போராடப்போவதாக தெரிவித்தார். 

Night
Day