பிரதமர் மோடி இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் அல்ல

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் நரேந்திரமோடி இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் அல்ல என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட இனத்தவர்களுக்‍கு உரிய இடஒதுக்‍கீடு சலுகை காங்கிரஸ் ஆட்சியில் மறுக்‍கப்பட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில், ஒடிசாவில் பாரத்ஜோடோ நியாய யாத்திரை நடத்தி வரும் ராகுல்காந்தி, பிரதமர் மோடி இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை சாராதவர் என்றும், அவர் குஜராத்தில் பொது பிரிவான தெலி சமூகத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டார். கடந்த 2000ம் ஆண்டு பாஜக ஆட்சியில் இருந்தபோது தெலி சமூகத்தினர் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இணைக்‍கப்பட்டதாகவும், மோடி, தனது ஆட்சியில் சாதிவாரி கணக்‍கெடுப்பை நடத்தவில்லை எனவும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

Night
Day