பிரதமர் மோடி தலையீட்டால் மாநிலங்களுக்கான நிதி பெருமளவில் குறைக்கப்படுகிறது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய நிதி ஆணையத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தலைமையிலான பாஜக அரசின் தலையீடு காரணமாக மாநிலங்களுக்கு சேர வேண்டிய நிதி பெருமளவு குறைக்கப்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தகவல் தொடர்புப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 2014-ல் பிரதமர் மோடி ஆட்சி அமைந்தது முதலே மாநிலங்களுக்கு சேர வேண்டிய நிதி குறைக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். 14-வது நிதி ஆணையத்தில் பிரதமர் மோடியே நேரடியாக தலையிட்டு சட்டத்துக்கு முரணாக மாநிலங்களுக்கு சேர வேண்டிய வரி வருவாயின் பங்கினை களவாடும் முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் சாடியுள்ளார்.

Night
Day