பிரதமர் மோடி நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்துக - உள்துறை அமைச்சகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளின்போது அவர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வரும் பிரதமர் மோடி, பாஜகவின் பொதுக் கூட்டங்களில் உரையாற்றுகிறார். இதனையடுத்து, பிரதமரின் பயணத்திட்டம் இறுதி செய்யப்பட்டவுடன் அவர் செல்ல உள்ள வழித்தடங்கள் தீவிர கண்காணிப்புகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும், ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால் மாற்று வழியில் செல்வதற்கு 2வது திட்டத்தை முன்னெச்சரிக்கையாக தயார் செய்ய வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

Night
Day