பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் - பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். 

இந்தியா ஐரோப்பா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்றுவது குறித்தும், வர்த்தக ரீதியான தொடர்புகளை விரிவுபடுத்துவது பற்றியும் இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர். தொடர்ந்து பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றியும் இரு தலைவர்களும் கலந்துரையாடினர். இந்தியா பிரிட்டன் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இருவரும் விவாதித்தது குறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இருவரும் ஆக்கப்பூர்வ செயல்பாடுகள் பற்றி விவாதித்தாக குறிப்பிட்டுள்ளார்.

varient
Night
Day