பீகார் காங்கிரஸ் மேலிட பார்வையாளராக பூபேஷ் பாகல் நியமனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் மாநிலத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நீதி யாத்திரைக்கான மேலிட பார்வையாளராக பூபேஷ் பாஹலை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. 

பீகார் மாநிலத்தில் ஜனதா தளம் - ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கடந்த இரு நாள்களாகவே மாநிலத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. நிதிஷும் பா.ஜ.க.வும் மீண்டும் கூட்டு சேர்ந்துள்ளதாகவும், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை நிதிஷ் கைவிட்டு விட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பாஹலை ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நீதி யாத்திரைக்கான மேலிட பார்வையாளராக நியமித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார். பீகார் மாநில காங்கிரஸ் இதர பணிகளையும் பூபேஷ் பாகல் மேற்பார்வை செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day