பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுஷில் குமார் மோடி புற்று நோய் பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 72. 

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷில் மோடி, கடந்த  மாதம்தான் தனக்கு புற்று நோய் பாதிப்பு இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதனால் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் கட்சிப் பணியில் இருந்து விடுவிக்குமாறும் தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்தநிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்துள்ளார். அவர் 2017 முதல் 2020 வரை பீகார் துணை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். சுஷில் குமார் மோடியின் மரணத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Night
Day