இந்தியா
சந்திரயான் 4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நிலவுக்கு சென்று அதன் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் வகையில் சந்திரயான்...
நம் நாட்டின் புதிய ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக பதவியேற்ற மனோஜ் பாண்டேயின் பதவி காலம் கடந்த மே 31-ம் தேதி நிறைவடைந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி அவரது பதவிகாலம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மனோஜ் பாண்டே பதவி காலம் வருகிற 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது ராணுவ துணைத்தளபதியாக உள்ள உபேந்திரா திவேதி, வருகிற 30-ம் தேதி தலைமை தளபதியாக பொறுப்பேற்கிறார்.
நிலவுக்கு சென்று அதன் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் வகையில் சந்திரயான்...
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்ள?...