புதுச்சேரியில் விரைவில் இலவச அரிசி வழங்கப்படும் - முதலமைச்சர் ரங்கசாமி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் விரைவில் இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி மாணவர்களுக்கு காலையில் வழங்கப்படும் ரொட்டி பாலுடன் பழங்களும் வழங்க அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். மேலும் பட்ஜெட்டுக்கு  விரைவில் மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கும் என்றும் புதுச்சேரியில் விரைவில் இலவச அரிசியுடன் மானிய விலையில் பருப்புகள், சர்க்கரை, சமையல் எண்ணைகள் வழங்க ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Night
Day