புதுச்சேரியில் இந்த கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் இந்த கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பாட வகுப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்சி படத்திட்டம் இந்த கல்வியாண்டு அமல்படுத்தபட்டது. இந்நிலையில் cbsc பாடத்திட்டத்தின் படி நாள் ஒன்றுக்கு 8 வகுப்புகள் நடத்த பட வேண்டும் அதன் அடிப்படையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வரும் 15ம் தேதி முதல் 8 பாட வகுப்புகள்  நடத்த புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  இதற்கான கால அட்டவணையையும் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி காலை முதல் மதியம் வரை 4 வகுப்புகள் தலா 45 நிமிடமும், மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் முதல் மாலை வரை 4 வகுப்புகள் தலா 40 நிமிடமும் நடைபெற உள்ளது. 

Night
Day