புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது - செவ்வேள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு குறித்த ஆட்டோ பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும், தற்போது வரை ஒற்றை இலக்கத்தில் மட்டுமே பாதிப்பு உள்ளதாகவும் கூறினார். அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் படுக்கை வசதிகள் உள்ளதாக கூறிய அவர், மத்திய அரசின் தரச்சான்று பெற்று மருந்துகள் வழங்கப்படுவதாவும் செவ்வேள் தெரிவித்தார்.    

Night
Day