புதுச்சேரியில் பேருந்துகளை கவனமாக இயக்‍குமாறு ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்‍கு போலீசார் அறிவுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் கிழக்கு போக்குவரத்து போலீசார் தனியார் பேருந்துகளை சோதனையிட்டதுடன், பயணிகள் பேருந்தில் ஏறி இறங்குவதை கண்காணித்து பேருந்தை இயக்குமாறு ஒட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்‍கு அறிவுறுத்தினர். புதுச்சேரியில் நேற்று பிற்பகல் கல்லூரி மாணவர் ஒருவர் தனியார் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற போது தவறி கீழே விழுந்தார். பேருந்து அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் புதுச்சேரி கடலூர் மறைமலை அடிகள் சாலை சந்திப்பில் கிழக்கு போக்குவரத்து காவல்துறையினர் தனியார் பேருந்துகளில் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட ஒலிப்பான்கள் பயன்படுத்திய வாகனத்தில் இருந்து ஒலிப்பான்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். பேருந்து நிறுத்தத்தில் இருந்து அவசரமாக பேருந்துகளை இயக்க கூடாது என்று அறிவுறுத்தினர். 

Night
Day