புதுச்சேரியில் 10 தீயணைப்பு வாகனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி தீயணைப்புத்துறைக்கு சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட அதிநவீன 10 தீயணைப்பு வாகனங்களை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். 

புதுச்சேரி அரசின் தீயணைப்பு துறைக்கு 5 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பில் 10 அதிநவீன தீயணைப்பு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதனை, தீயணைப்புத் துறைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் சாய்  சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த, புதிய தீயணைப்பு வாகனங்கள் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள தீயணைப்பு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.      

Night
Day