புதுச்சேரி பேரவையில் இதுவே தனது முதலும் கடைசியுமான உரை - சி.பி.ராதாகிருஷ்ணன் கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையுடன் இன்று தொடங்கியது. துணை நிலை ஆளுநரின் உரையின்போது, மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என கூறி திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். அப்போது, தனது உரையில் என்ன விபரம் இருக்கிறது என்பதை அமைதியாக கேளுங்கள் - அதில் சந்தேகம் இருந்தால் குறிப்பிடுங்கள் -அதற்கு விளக்கம் அளிக்கிறேன் என எதிர்கட்சி உறுப்பினர்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார். தான் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டதால் புதுச்சேரி பேரவையில் இதுவே தனது முதலும் கடைசியுமான உரை என அவர் கூறினார். ஆனாலும், துணை நிலை ஆளுனரை உரையை புறக்கணித்து பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. 

Night
Day