புதுச்சேரி மத்திய சிறையில் 146 சிறைக்கைதிகள் உடலுறுப்பு தானம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் உள்ள 146 கைதிகள் உடலுறுப்புகளை தானமாக வழங்கியுள்ளனர். காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் 300-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறையில் உள்ள கைதிகளை ஜிப்மர் மருத்துவ குழுவினர் சந்தித்து பேசினர். அப்போது 57 தண்டனை கைதிகள், 89 விசாரணை கைதிகள் என 146 பேர் உடலுறுப்புகளை தானம் வழங்க முன் வந்தனர். அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கையெழுத்திட்டனர். 

Night
Day