புல்டோசர் இடிப்பு - அசாம் அரசுக்கு உச்ச நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புல்டோசர் இடிப்பு நடவடிக்கைக்காக அசாம் அரசிற்கு உச்ச நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பொதுச் சாலைகள், நடைபாதைகள், ரயில் பாதைகள் மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளைத் தவிர்த்து, நாடு முழுவதும் அரசுகளின் புல்டோசர் இடிப்புகளுக்கு தடை விதித்து உச்ச நீநிமன்றம் கடந்த 17-ம் தேதி உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை மீறி அசாம் அரசு தங்கள் வீடுகளை இடித்து விட்டதாக 47 குடியிருப்பாளர்கள் மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த 
நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன்  அமர்வு, அசாம் அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியதுடன் 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். 

Night
Day