பெங்களூருவில் அழுக்கு ஆடை அணிந்த விவசாயிக்கு மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூருவில் அழுக்கு ஆடையுடன் சென்ற முதியவரை மெட்ரோ ரயிலில் ஏற்ற மறுத்த விவகாரத்தில், தேசிய மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெங்களூரு ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் கரைபடிந்த அழுக்கு ஆடை அணிந்தபடி, தலையில் மூட்டையுடன் விவசாயி ஒருவர் ரயிலில் பயணம் மேற்கொள்ள சென்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரி ஒருவர், விவசாயியின் ஆடை  காரணம் காட்டி ரயிலில் ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக, பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Night
Day