பெங்களூரு குண்டு வெடிப்பு - வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேயில் கடந்த 1ம் தேதி குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஹோட்டல் ஊழியர்கள் உட்பட சுமார் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரின் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் வெளியிட்டனர். வெடிகுண்டு சம்பவம் குறித்து மத்திய குற்றப்பிரிவு மற்றும் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், 3 நாட்களாகியும் இன்னும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சூழலில் வழக்கு விசாரணையை என்ஐஏவுக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Night
Day