பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் - முக்கிய குற்றவாளி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவெடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெல்லாரியில் வைத்து குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஷபீரிடம் ரகசிய இடத்தில் வைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த 1ஆம் தேதி ப்ரூக்ஃபீல்டு பகுதியில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவெடித்து 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியிடப்பட்டு, குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் 10 லட்ச ரூபாய் சன்மானம் என என்.ஐ.ஏ. அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Night
Day