பெங்களூரு: ஐபிஎல் போட்டிக்‍காக சின்னச்சாமி மைதானத்துக்‍கு 75,000 லிட்டர் தண்ணீர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூரு நகரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளுக்‍காக ​அங்குள்ள சின்னச்சாமி மைதானத்துக்‍கு நாள் ஒன்றுக்‍கு 75 ஆயிரம் லிட்டர் தண்ணீரை லாரிகளில் வழங்க குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது.

பெங்களூரு நகரில் இந்த ஆண்டு கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் இந்த ஆண்டுக்‍கான ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வருகிற மார்ச் 25,29 மற்றும் ஏப்ரல் 2 ஆம் தேதிகளில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக போட்டி நடைபெறும் நாளில் நாள் ​ஒன்றுக்‍கு 75 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாக கர்நாடக கிரிக்‍கெட் சங்க நிர்வாகம், பெங்களூரு நகர குடிநீர் வடிகால் வாரியத்துக்‍கு கோரிக்‍கை விடுத்தது. இதனை ஏற்று தேவையான தண்ணீரை வழங்க குடிநீர் வடிகால் வாரியம் ஒப்புக்‍கொண்டுள்ளது. 

Night
Day