பெங்களூர்: மேட்ரிமோனியில் 250க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய நபர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேட்ரிமோனி இணையதளத்தில் ஆண் மாடல்களின் புகைப்படங்களை பதிவிட்டு பெண்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். நரேஷ் பூரி கோஸ்வாமி என்பவர், மேட்ரிமோனி இணையதளத்தில் ஆண் மாடல்களின் புகைப்படங்களை பகிர்ந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார். அவர், விதவைகள், விவாகரத்து பெண்களை குறிவைத்து, அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவர், செல்போனில் மாப்பிள்ளை போலவும், நேரில் மாப்பிள்ளையின் மாமா எனவும் கூறியும் மோசடி நாடகம் நடத்தியுள்ளார். இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த பெங்களூர் போலீசார், குற்ற செயலில் ஈடுபட்ட ராஜஸ்தானை சேர்ந்த நரேஷ் பூரி கோஸ்வாமியை கைது செய்தனர்.

Night
Day