பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்தது. அதன்பிறகு, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால், மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  


Night
Day