பெண் மருத்துவர் கொலையைக் கண்டித்து மருத்துவமனையை சூறையாடிய கும்பல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலையை கண்டித்து நள்ளிரவில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததால் பெரும் பதற்றம் நிலவியது. அங்குள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரிக்குள் திடீரென நுழைந்த கும்பல் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியது. மேலும், மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இதனையடுத்து, வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசினர். இதனால், மருத்துவமனை வளாகம் அருகே பதற்றமன சூழல் நிலவுகிறது.

Night
Day