பேருந்து நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பாஸ்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானாவில் பேருந்து நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணிப்பதற்கான பாஸ் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த 16ம் தேதி கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் சென்ற குமரி என்ற பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தும் வர தாமதமானதால், அங்கிருந்த போக்குவரத்து கழக பெண் ஊழியர்களே பிரசவம் பார்த்துள்ளனர். இதில் குமரிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் மாநில அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்வதற்கான சிறப்பு பாஸ் வழங்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.  

varient
Night
Day