பொதுத் தேர்தல் வந்தாலே, மக்களை திசைதிருப்பத் தொடங்குவார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பொதுத் தேர்தல் வந்தாலே, பிரதமர் மோடி உணர்ச்சிகரமான விவகாரங்களைப் பேசி, மக்களை திசை திருப்பத் தொடங்கிவிடுவார் என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்க கடுமையாக உழைத்தது போல் வரும் மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ்  வெற்றி பெறுவதற்கு பணியாற்ற வேண்டும் என்றார். மோடியின் வாக்குறுதிகள் என்ற விளம்பரத்தை குறிப்பிட்ட அவர், ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளையே பிரதமர் இதுவரை நிறைவேற்றவில்லை என மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார். 

Night
Day