பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் 100 நகரங்களில் 76 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஸ்மார்ட் சிட்டி எனப்படும் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 100 நகரங்களில் இதுவரை 76 ஆயிரம் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ், 100 நகரங்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பில் சுமார் 8 ஆயிரம் திட்டங்கள் தொடங்கப்பட்டதாகவும் அதில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 6 ஆயிரத்து 650 திட்டங்கள் நிறைவடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நகரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களையும் பட்டியலிட்டுள்ளது.

Night
Day