போராட்டத்துக்கு வந்த விவசாயிகள் வாகனங்களை பஞ்சாப் அரசு தடுத்ததாக புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பஞ்சாப் அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் வலியுறுத்தி உள்ளார். பஞ்சாப் எல்லைக்குள் நுழைந்து மத்திய படையினர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறிய சர்வான் சிங் பாந்தர், மத்திய படையினர் மீது 302 பிரிவின் கீழ் பஞ்சாப் அரசு வழக்குப்பதிய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். போராட்டம் நடந்த இடத்துக்கு வரமுயன்ற விவசாயிகள் மற்றும் வாகனங்களை பஞ்சாப் அரசு தடுத்ததாக குற்றம் சாட்டிய சர்வான் சிங் பாந்தர், விவசாயிகள் போராட்டம் குறித்து பஞ்சாப் அரசு தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

varient
Night
Day