போர்ட்பிளேயரின் பெயர் "ஸ்ரீ விஜயபுரம்" என மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அந்தமான் நிக்கோபாரின் தலைநகரான போர்ட் பிளேரின் பெயரை மாற்றி மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேசத்தை காலனித்துவ முத்திரையிலிருந்து விடுவிக்கும் முயற்சியாக அந்தமான் நிக்கோபாரின் தலைநகரான போர்ட் பிளேரின் பெயரை ஸ்ரீ விஜயபுரம் என மாற்றுவதாக கூறியுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஸ்ரீ விஜயபுரம் என்ற பெயர் அந்தமான் நிக்கோபாரின் வளமான வரலாறு மற்றும் வீரம் மிக்க மக்களை போற்றுவதாகவும், நமது பாரம்பரியத்தைக் கொண்டாடுவதற்கான உறுதிப்பாட்டை இது பிரதிபலிப்பதாகவும் கூறியுள்ளார்.

Night
Day