போலீஸ் கமோண்டாக்கள் மீதான தாக்குதலில் மியான்மர் தீவிரவாதிகளுக்குத் தொடர்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மணிப்பூரின் எல்லையோர நகரமான மோரேவில் நேற்று முன்தினம் போலீஸ் கமாண்டோக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் மியான்மரை சேர்ந்த சில தீவிரவாதிகளும் ஈடுபட்டிருக்கலாம் என மணிப்பூர் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார். 2 கமாண்டோக்கள் கொல்லப்பட்ட இந்த தாக்குதலை குக்கி தீவிரவாதிகள் முன்னெடுத்ததாகவும் அவர்களுடன் மோரேவில் செயல்படும் மியான்மர் தீவிரவாதிகள் அமைப்பான PDF-ம் இணைந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். தீவிரவாதிகள் உயரமான இடங்களில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதால்தான் உயிரிழப்புகள் என்றும் இனி கமாண்டோக்களையும் உயரமான இடங்களில் முகாம் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

Night
Day