மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் - ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 45 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா தேர்தலில் போட்டியிடும் 45 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. 288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மஹாராஷ்டிராவில் அடுத்த மாதம் 20 -ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தற்போது, 45 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அறிவித்துள்ள நிலையில், இதில் 37 வேட்பாளர்கள் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day