மகாராஷ்டிரா: குடிசை வீடுகள் உள்ள இடத்தில் பயங்கர தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலம் மீரா பயந்தரில் குடிசை பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஆசாத் நகரில் உள்ள குடிசை பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு வானுயர கரும்புகையுடன் மளமளவென தீ பற்றி எரிந்ததால் அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புதுறையினர் துரிதமாக செயல்பட்டு விட்டில் இருந்தவர்களை மீட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்துக்கான காரணங்களை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day