மகாராஷ்டிரா: சாலையோர டீ கடையில் தேநீர் அருந்திய பில் கேட்ஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சாலையோர டீ கடையில் தேநீர் அருந்திய தொழிலதிபர் பில் கேட்ஸின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நாக்பூரில் உள்ள சதர் என்ற பகுதியில் சாலையோரத்தில் டோலி என்பவர் தனித்துவமான ஸ்டைலில் தேநீர் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸ், டோலி சாய்வாலா கடையில் தேநீர் அருந்தினார். இந்த, வீடியோவை பில் கேட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Night
Day