மகாராஷ்டிரா: மராத்தா சமூகத்தினரின் போராட்டத்தில் அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிராவில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மராத்தா சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில், அரசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மகாராஷ்ர அரசு முன்வந்துள்ளது. இருப்பினும், தங்களை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்கக் கோரி மராத்தா சமூக அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்னா மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் ஆவேசமடைந்த சிலர் அரசுப் பேருந்துக்கு தீ வைத்ததால் பதற்றம் நிலவியது. இதையடுத்து சாலையில் அரசுப் பேருந்து கொழுந்துவிட்டு எரிந்தது. மராத்தா சமூகத்தினரின் போராட்டத்தால் மகாரஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. 

Night
Day