மகாராஷ்டிரா: லாரியில் இருந்து கொட்டிய ஆயிலால் விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் சாலையில் கசிந்த ஆயிலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் 4 வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து படுகாயமடைந்தனர். கோட்பந்தர் மன்பாடா பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரியில் இருந்து ஆயில் கசிந்துள்ளது. அப்போது, லாரியின் பின்புறத்தில் வந்துக் கொண்டிருந்த இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் வழுக்கி விழுந்ததில் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாநகராட்சி ஊழியர்கள், ஆயில் படர்ந்திருந்த சாலை மீது மணல்களை தூவி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

Night
Day