மகாராஷ்டிர அரசுக்கு மராத்தா போராட்டக்குழுத் தலைவர் எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மராத்தா இடஒதுக்கீடுக் கோரிக்கையை இன்று நண்பகல் 12 மணிக்குள் மாநில அரசு ஏற்க வேண்டும் என மராத்தா போராட்ட குழுத் தலைவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல் மகாராஷ்டிர அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். திரளான மராத்தா மக்களுடன் நவி மும்பைக்குள் நுழைந்துள்ள அவர், கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் மும்பை ஆசாத் மைதானத்திற்கு புறப்படுவதை யாராலும் தடுக்க முடியாது எனக் கூறியுள்ளார். அரசு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டுவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனிடையே மராத்தா மக்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் மும்பை போராட்டத்தை கைவிடுமாறும் மகாராஷ்டிர மாநில அமைச்சர் தீபக் கேசர்கேர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Night
Day