மக்களவைத் தேர்தலில் 96 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதியானவர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2024 மக்களவைத் தேர்தலில் 96 கோடிக்கும் மேற்பேட்டோர் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என  தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கவுள்ள நிலையில் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. இதில் 47 கோடி பெண்கள் உள்பட 96 கோடிக்கும் அதிகமானோர் வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களவைத் தேர்தலுக்காக 12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தேர்தலை சுமூகமாக நடத்தி முடிக்க ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Night
Day