மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வாக வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஓம் பிர்லா மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு அளிக்க தயார் என்று அறிவித்துள்ள இண்டியா கூட்டணி, அதேசமயம் துணை சபாநாயகர் பதவியை எதிர் கட்சிக்கு வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் பிரதமராக மோடி தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்றுள்ளார். நேற்று துவங்கிய 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடரில், 2வது நாளான இன்றும் புதிய எம்பிக்கள் பதவியேற்று வருகின்றனர். 

இதனை தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால், 17வது மக்களவையில் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லாவை மீண்டும் சபாநாயகராக்க பாஜக முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவற்காக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடன் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மக்களவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஓம் பிர்லா வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். பெரும்பான்மை எம்பிக்களுடன் அவர் மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட விருக்கிறார். இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் துணை சபாநாயகர் பதவி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day