மக்களவை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கும் மல்லிகார்ஜூன கார்கே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மக்களவை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள மல்லிகார்ஜூன கார்கே, தொகுதி பங்கீட்டில் மும்மரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே மக்களவை தேர்தலில் போட்டியிட்டால் அந்த தொகுதிக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்படும் என்பதால், அவர் இந்த தேர்தலை தவிர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக மல்லிகார்ஜூன கார்கே போட்டியிடும் கர்நாடகா மாநிலம் குல்பர்கா தொகுதியில் அவரது மருமகன் ராதாகிருஷ்ணன் தொட்டமணியை நிறுத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Night
Day