மக்களவை தேர்தலுக்கு பிறகு ராகுல்காந்தி கைது செய்யப்படுவார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தலுக்கு பிறகு ராகுல்காந்தி கைது செய்யப்படுவார் என்று அசாம் மாநில முதலமைச்சர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ நியாய யாத்திரையின்போது காங்கிரஸ் கட்சியினருக்‍கும், போலீசுக்‍கும் மோதல் வெடித்தது. இதுகுறித்துப் பேசியுள்ள அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஷ்வா சர்மா, அசாம் மாநிலத்தை சீர்குலைப்பதே காங்கிரஸ் கட்சியின் நடை பயணத்திற்கான நோக்கம் என குற்றம்சாட்டியுள்ளார்.  தற்போது ராகுல் காந்தி கைது செய்யப்பட்டால் அது அரசியலாக்கப்படும் என்பதால் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அவர் கைது செய்யப்படுவார் எனவும் தேர்தலுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்ய விரும்பவில்லை எனவும் முதலமைச்சர் ஹிமந் பிஷ்வா சர்மாகூறியுள்ளார். 

Night
Day