மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது - அமித்ஷா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க மெய்தி, குக்கி சமூகத்தினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கடந்த 3 நாட்களாக மணிப்பூரில் அமைதி நிலவி வருவதாகவும், இந்தியா - மியான்மர் எல்லையில் வேலி அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறினார். மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.  

Night
Day