மணிப்பூரில் துப்பாக்கிகளை கைவிடும் போராட்டத்தை முன்னெடுத்த காவல்துறையினர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மணிப்பூரில் கூடுதல் எஸ்.பி. கடத்தப்பட்டதைக் கண்டித்து காவல்துறையினர் துப்பாக்கிகளை கைவிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு இம்பால் மாவட்ட கூடுதல் எஸ்.பி. மொய்ரங்தெம் வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை போராட்டக்காரர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். மேலும், கூடுதல் எஸ்.பி-யை கடத்திச் சென்று பின்னர் விடுவித்தனர்.  இந்த நிலையில் ஆயுதமேந்திய கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கக் கோரி, மாநில காவல்துறையினர் துப்பாக்கிகளை கைவிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய கும்பலிடம் மென்மையான போக்கை கடைபிடிக்க மணிப்பூர் காவல்துறை உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததற்கு, அம்மாநில போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Night
Day